தமிழ் வலைப்பதிவு தொடங்குவது என்றும், தாத்தாவின் படைப்புக்களை( அப்படியே என்னோடதையும் ) போடலாம் என்றும் முடிவாயிற்று. அதற்கு முன் பெயர் என்ன வைப்பது ? அதனால் தாத்தா பெயரில் இருந்து யோசிக்க தொடங்கினேன் !!
ஒரு முறை தாத்தா எனக்கு கூறியது நினைவில் வந்தது, 'என் பெயர் சுந்தரபாண்டியன், அதை சுருக்கமா சு. பா. (சுனா பான ) என்றும் சில பேர் கூப்பிடுவாங்க'. அதற்கு நான் சொன்ன பதில், 'ஐ !! என்னோட பெயரும் அது தானே'. அதனால் அதிகம் யோசிக்காமல் சட்டென்று தோன்றியது தான் இந்த சுனா-பானா.
ஒரு பதிவின் நடுவில் நல்ல தமிழ் பத்தின ஒரு பாட்டாக இருக்கணும் என்று யோசித்த போதே பாரதியின் 'யாமறிந்த மொழிகளிலே ' மனதில் பட்டது. கவிதையை டைப் செய்யும் போது, இங்க இன்னொரு சுனா-பான இருப்பதை உணர்ந்தேன். அது தான் நம்ம பாரதி - மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
அதனால் இந்த பெயரே பதிவிற்கு வைப்பது என்று முடிவு செய்தேன்.
Wednesday, April 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment