Wednesday, April 22, 2009

தாத்தா..

முதல் பதிவு எப்படியும் ப்ளாக் ஆரம்பிக்க காரணம், தமிழில் எதுக்கு, ஏன் என்று ஒரு வரலாறு சொல்ல வேண்டும். அதனால் இதோ,

ஒருமுறை
நானும் தாத்தாவும் பேசி கொண்டிருந்தோம்.
தாத்தா என்னிடம் சொன்னது , " நீ கவிதை எல்லாம் எழுதுவியாமே? என்னிடம் கொண்டு வந்து காட்டு" .
நான் : 'ஐயோ!! உங்களை மாதிரி எனக்கு நல்ல, இலக்கணம், செந்தமிழ் நிறைந்த கவிதை எல்லாம் எழுத தெரியாது, ஏதோ சும்மா புது கவிதை மாதிரி இருக்கும்'.
தாத்தா: ' பரவாயில்லை, கொண்டு வா, பார்ப்போம். உன்னோடதையும் என்னோடதையும் சேர்த்து புதுமையும், பழமையும் கலந்த படைப்புக்கள் கொண்ட ஒரு புத்தககமாக வெளியிடுவோம்' .
எனக்கு அப்பொழுதெல்லாம் அவரிடம் என்னோட கவிதைகளை காட்ட பயம். கடைசி வரை காட்டவும் இல்லை, ஆனால் அந்த புத்தகம் வெளியிடும் ஆசை மட்டும் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
அதை செயல் படுத்தும் முன்னவே அவர் இறைவனடி சேர்ந்தார் ( வருடம் 2007 )

அதே வருடம் தமிழ் வலைப்பதிவுகள் மிகவும் பிரபலம் ஆகி கொண்டிருந்த நேரம் .நானும் என் கணவரும் எழுதும் வலைப்பதிவில் தமிழில் எழுதலாம் என்று சில சில தமிழ் பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்.
அப்போதே தாத்தா வின் படைபுக்களை தமிழ் வலைப்பதிவில் போடும் எண்ணம் தீவிர மானது. அவைகள் வெறும் காகிதத்தில் வைக்க படவேண்டியவை அல்ல. பல காலங்களுக்கும், இனி வரும் பல சந்ததிகளும் படிக்க வேண்டிய பொக்கிஷங்கள். இந்த கணினி யுகத்தில் தான் இதனை சாதிக்க எத்தனை வழிமுறைகள். அதில் ஒன்று தான் இந்த தமிழ் வலைப்பதிவு - தாத்தாவிற்காக !!

No comments:

Post a Comment